சென்னை திரும்பிய ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு!!
ஜெயலலிதாவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதையடுத்து, இன்று பிற்பகல் அவர் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையைவிட்டு வெளியே வந்தார்.
கார் மூலம் பழைய விமான நிலையம் சென்ற அவர், சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். கடந்த 27ம் திகதி சனிக்கிழமை அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது இல்லத்திற்கு கார் மூலம் சென்றார்.
விமானநிலையத்தில் இருந்து ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை அதிமுக தொண்டர்கள் மனித சங்கிலி அமைத்து வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து பொலிஸார் ஜெயலலிதா வாகனம் செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்தை கட்டுக்குள்கொண்டுவந்துள்ளனர்.
ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating