வாடகை வாகனங்களை அடகு வைத்த பெண்கள் உட்பட அறுவர் கைது!!

Read Time:1 Minute, 16 Second

1087595369Untitled-1போலி பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களை அடகு வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இவர்கள் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்களால் வாகனங்கள் வாடகைக்குப் பெறப்பட்டு, அவை அடகு வைக்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்ட இரு கார்கள், லொறி ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வத்தேகம, ராகம, வத்தளை, எம்பிலிபிடிய மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை திரும்பிய ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு!!
Next post ஜெயலலிதா நாளை சிறையில் இருந்து விடுதலை ஆகி விடுவார்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. பேட்டி!!