எபோலாவை ஒழிக்க பேஸ்புக் நிறுவனர் நன்கொடை!!
கீனியா, லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில், ´எபோலா´ வைரஸ், என்ற நோய், மிக வேகமாக பரவி வருகிறது.
அங்கு ஏராளமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளமான, ´பேஸ்புக்´கின் நிறுவனர்களில் ஒருவரான, மார்க் ஜுகர்பெர்க்கும், அவரின் மனைவி பிரிசில்லாலும், எபோலோ நோய் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 150 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இதற்கான மருத்துவ மையத்துக்கு, இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜுகர்பெர்க் கூறுகையில், ´´தற்போதைய நிலவரப்படி, இந்த நோயால், 8,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவுவதால், 10 இலட்சம் பேருக்கு, இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த நோய் தடுப்பு நடவடிக்கைளுக்காக இந்த தொகையை அளித்துள்ளோம்,´´ என்றார்.
Average Rating