களியக்காவிளை அருகே இளம்பெண் திடீர் மாயம்: போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 57 Second

f81d6285-8a93-4e85-bbd0-f916903a38df_S_secvpfகுழித்துறை அருகே பாலவிளை முலமுட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் கிறிஸ்டோபர் (வயது 28).

இவருக்கும், களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்த தீபாவுக்கும்(26) கடந்த 25.4.2013 அன்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த 1½ மாதங்களுக்கு பிறகு சாமுவேல் கிறிஸ்டோபர் வெளி நாட்டு வேலைக்கு சென்றார். இதனால் தீபா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்தநிலையில் சாமுவேல் கிறிஸ்டோபர் கடந்த 27.6.14 அன்று ஊர் திரும்பினார். அதன்பின்னரும் தீபா தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தாராம். கடந்த 12–ந் தேதி சாமுவேல் கிறிஸ்டோபர் தனது மனைவி வீட்டுக்கு சென்ற போது அங்கு அவரை காணவில்லை.

தீபாவின் குடும்பத்தினரிடம் விசாரித்த போது அவர் கடந்த 10–ந் தேதியே வீட்டில் இருந்து மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சாமுவேல் கிறிஸ்டோபர் தனது உறவினர்களின் வீடுகளில் தேடிப் பார்த்தும் தீபா கிடைக்கவில்லை.

இதையடுத்து, மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சாமுவேல் கிறிஸ்டோபர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீபாவை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறைந்த பின்னும் சம்பாதிப்பதில் மைக்கல் ஜாக்சன் முதலிடம்!!
Next post கறுப்பு பண விவகாரத்தில் வாக்குறுதியை மோடி நிறைவேற்றவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்: திக்விஜய் சிங்!!