ரூ. 40 இலட்சம் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது!!
Read Time:57 Second
40 இலட்சம் ரூபாய் பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
இன்று அதிகாலை 03.15 அளவில் துபாய் செல்லவந்த ஒருவரை பரிசோதனை செய்த போது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வௌிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் சவுதி, கட்டார் மற்றும் ஓமான் ரியால், குவைட், பஹ்ரின் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய டினார், ஸவிஸ் ப்ராங் என்பன அடங்குவதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating