இரு இலங்கையர்கள் சென்னையில் கைது!!
Read Time:1 Minute, 18 Second
சர்வதேச அளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இரு இலங்கையர்கள் தமிழகத்தின் சென்னையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி பொலிஸாரின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சென்னைப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர்கள் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்களோடு இந்த வியாபாரத்துடன் தொடர்புடைய இந்தியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் வசமிருந்து 17 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களால் இந்தியா ஊடாக சில நாடுகளுக்கு ஹெரொயின் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தமிழ்நாடு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating