படகு விபத்து – தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்!!
Read Time:49 Second
தங்காலை – ஒருவெல்ல பிரதேசத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த இரு மீனவர்களும் கலமெடிய கடற்பரப்பில் தத்தளித்து வருவதாக தெரியவந்துள்ளது.
நேற்று மாலை கடலுக்குச் சென்ற குறித்த படகில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Average Rating