இருவேறு விபத்துக்களில் ஒருவர் பலி, 23 பேர் காயம்!!
Read Time:1 Minute, 13 Second
தம்முள்லை – எஹெலியகொட வீதி கோடமாவிட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி நீரோடையில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் எட்டுப் பேர் எஹெலியகொட ஆதார வைத்தியசாலையிலும், 15 பேர் கிரிபோருவ ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஏ9 வீதியின் பரந்தன் 259வது கட்டைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே பலியாகியுள்ளார்.
Average Rating