காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வுகள் முல்லைத்தீவில்!!

Read Time:1 Minute, 45 Second

1737094430Untitled-1காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி நவம்பர் மாதம் 2ம் திகதி மற்றும் 3ம் திகதிகளில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காலை​ 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரையிலும், முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளன.

மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நவம்பர் 4 மற்றும் 5ம் திகதிகளில் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை ஆணைக்குழுவின் முன்னைய அமர்வுகள் இரண்டாவது தடவையாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் திகதியில் இருந்து 30 ம் திகதி வரை இடம்பெற்றது.

இதில் 250 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அடங்கலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிவேக வீதியில் மேலும் 43 பஸ்களுக்கு அனுமதி!!
Next post புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்!!