புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை: அரசு தீர்மானம்!!
Read Time:1 Minute, 0 Second
ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டு மக்களிடம் கையெழுத்து வாங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
மாகாண மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனைத்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என சி.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Average Rating