பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர்!!

Read Time:1 Minute, 34 Second

a59dbd2b-95c6-45dd-b613-831e19c36c89_S_secvpfகத்தி முனையில் காரில் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றும் பெண் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநில தலைநகர் அம்ரிஸ்டரில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேனேஜராக பணியாற்றிவரும் மஞ்சு ஷர்மா, நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

க்ரிஸ்ட்டல் சவுக் பகுதியை நெருங்கியபோது, காரை வழிமறித்த ஒரு கும்பல், கத்தி முனையில் மஞ்சு ஷர்மாவை கடத்தியது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குருத்வாரா
ஷஹீத் கஞ்ச் சாஹெப் பகுதியை கார் நெருங்கியபோது, சமயோஜிதமாக செயல்பட்ட மஞ்சு ஷர்மா பயங்கரமாக கூச்சலிட்டு, அலறத் தொடங்கினார்.

இதைக் கண்டு மிரண்டுப் போன அந்த கடத்தல் கும்பல், காரை விட்டு கீழே குதித்து, தப்பி ஓட்டம் பிடித்தது. மஞ்சு ஷர்மா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அம்ரிஸ்டர் நகர போலீசார், அந்த கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது!!
Next post இரு மனைவிகள் உதவியுடன் இளம்பெண்ணை கற்பழித்த மந்திரவாதி!!