மேற்கு வங்காளத்தில் சமையல்காரியை கற்பழித்த ஆஸ்திரேலிய ஆசாமி கைது!!

Read Time:1 Minute, 33 Second

14e8cee8-1d9c-48f5-9f62-7c56f348e735_S_secvpfமேற்கு வங்காள மாநிலத்தில் சமையல்காரியை கற்பழித்த குற்றத்துக்காக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடியா மாவட்டம், நபாட்விப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த ஆர்தர் அரேல் ஸ்மித் என்பவர், அங்குள்ள ‘இஸ்கான்’ எனப்படும் ‘ஹரே ராமா-ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் இணைந்து, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு காட்டி வந்தார்.

அவரது வீட்டில் சமையல் வேலை செய்ய்யும் ஒரு பெண், ஆர்தர் அரேல் ஸ்மித் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு வேண்டாத சிலர் அந்த பெண்ணை தூண்டிவிட்டு, என் மீது பொய்ப் புகார் தரும்படி வற்புறுத்தியதால் நான் குற்றவாளியாக்கப்பட்டுள்ளேன்’ என்று கூறும் ஆர்தர் அரேல் ஸ்மித்-திடம் விசாரணை நடத்திய போலீசார், அவரை கோர்ர்ட்டில் ஆஜர்படுத்தி 14 நாள் விசாரணை காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி!!
Next post பஞ்சாப்பில் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிய வங்கி பெண் மேனேஜர்!!