BJP வழங்கியது வெறும் தேர்தல் வாக்குறுதியே – மீனவர்கள் குற்றச்சாட்டு!!

Read Time:1 Minute, 21 Second

6130022618694804bjp5இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் விடயத்தில் பாரதீய ஜனதா கட்சி வழங்கிய உறுதிமொழிகளை மீறியுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போதும் 25 மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் 75 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுஸ்மா சுவராஜ், மீனவர்களுக்கென்று தனி அமைச்சு அமைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

அதேபோல தமிழகத்தின் பாரதீய ஜனதாக்கட்சி தலைவர்களும் உறுதிமொழிகளை வழங்கினர்.

எனினும் இன்று அவை அனைத்தையுமே தேர்தல் வாக்குறுதிகளாக மாத்திரம் கருத வேண்டியுள்ளதாக தமிழக மீனவர் அபிவிருத்தி நிதிய தலைவர் பி.ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!!
Next post இலங்கைக்கு விசேட குழு அனுப்ப ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் தயார்!!