இலங்கைக்கு விசேட குழு அனுப்ப ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் தயார்!!
Read Time:52 Second
இலங்கையில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலை கண்காணிக்க விசேட குழுவொன்றை அனுப்ப தயார் நிலையில் இருப்பதாக ஆசியாவின் தேர்தல் கண்காணிப்பு வலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி 30 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்ப தயார் என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இதுகுறித்து சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
Average Rating