மஹிந்த பாலசூரிய நாளை பதவியேற்பு!!

Read Time:1 Minute, 8 Second

2042411288downloadசட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய நாளை கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல செத்சிறிபாயவில் உள்ள அமைச்சில் நாளை காலை 9.55 அளவில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போது அதன் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி நியமிக்கப்பட்டார்.

மஹிந்த பாலசூரிய இலங்கையின் பொலிஸ் மா அதிபராக பதவிவகித்த 2011ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து அவர் பதவி விலகினார்.

பின்னர் அவர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு விசேட குழு அனுப்ப ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயம் தயார்!!
Next post ஹன்சிகாவை பதம் பார்த்த தேனீ!!