டைட்டானிக் கப்பல் பொருட்கள் பல லட்சம் ரூபாவிற்கு ஏலம்!!!
Read Time:1 Minute, 13 Second
கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இருந்த பொருட்கள் பல லட்சம் ரூபாவுக்கு ஏலம் போயுள்ளன.
இங்கிலாந்தின் வில்ட்ஷயர் என்ற இடத்தில் நடந்த ஏலத்தில் டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இதில் கப்பலின் உணவு நிரல் அட்டை 60 லட்சம் ரூபாவிற்கு ஏலம் போனது. பயணி ஒருவரின் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி 60 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவிற்கு ஏலத்தில் வாங்கப்பட்டது.
டைட்டானிக் பொருட்களை வாங்க உலகெங்கிலிருந்தும் ஏராளமானோர் விரும்பியதாக ஏலத்தை நடத்திய எண்ட்ரூ அல்ட்ரிட்ஜ் தெரிவித்தார்.
1912-ம் ஆண்டு சுற்றுலாவை தொடங்கிய டைட்டானிக் கப்பல் பனி மலை மீது மோதி கடலில் மூழ்கியது. இதில் ஆயிரத்து 500 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Average Rating