பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது!!
Read Time:1 Minute, 11 Second
தேனி பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் மகன் மரியராஜ் (வயது30). இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக அரசு பஸ்சில் தேனி வந்தார். இவருக்கு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே வந்தபோது மரியராஜ் வைத்திருந்த கைப்பையை தூக்கிக்கொண்டு வேகமாக இறங்கினார்.
அதில் ரூ.200 பணம் வைத்திருந்தார். மற்ற பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர் தேனி வாழையாத்துப்பட்டியை சேர்ந்த முனியம்மாள் (53) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating