இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் கோட்டாபய ராஜபக்ஷ முக்கிய சந்திப்பு!!
Read Time:1 Minute, 25 Second
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெய்ட்லி மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு புதுடில்லி நோர்த் புளக் அலுவலத்தில் நேற்று (20) இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது பல்வேறு பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.மதுரும் உடனிருந்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இந்திய பாதுகாப்பு செயலாளர் மதுர், இலங்கைக்கு விஜயம் செய்து பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தித்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating