தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்திற்கு விசேட ரயில் சேவை!!
Read Time:1 Minute, 16 Second
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (21) முதல் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நானுஓயா வரை விசேட சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்று இரவு 7.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ரயில் பயணத்தை ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து மலையகம் செல்லும் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதான புகையிரத கட்டுப்பாட்டாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் தீபாவளி தினத்தன்று காலை 8.00 மணிக்கு நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்கு பயணத்தை ஆரம்பிக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating