பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்!!
Read Time:44 Second
பண்டாரவளை – உடமல்வத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அட்டாம்பிட்டியவில் இருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த பஸ் இன்று காலை 9.45 அளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் 40 பேர் வரை பயணித்ததாகவும் காயமடைந்தவர்கள் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Average Rating