சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு டும் டும் ஆசை..!!

Read Time:2 Minute, 19 Second

unseen-swathiதெலுங்கில் புகழ் பெற்ற டிவி வர்ணனையாளராக இருந்த சுவாதி, தெலுங்குப் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 2008ல் வெளிவந்த சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தொடர்ந்து “போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது “அமளி துமளி, யட்சன்” ஆகிய தமிழ்ப் படங்களிலும், டபுள் பேரல் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். திரையுலகில் அறிமுகமாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சுவாதி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

கடந்த சில மாதங்களாகவே அவருடைய திருமணத்தைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவி வந்தன. அவற்றிற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த சுவாதி, தற்போது திருமணம் பற்றிய தகவலை அவரே சொல்லியிருக்கிறார்.

“சில நாட்களுக்கு முன் எனது பெற்றோரிடம், திருமணம் செய்து கொள்ளும் எனது சம்மதத்தை தெரிவித்து விட்டேன். அவர்களும் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்து விட்டனர். சரியான நேரத்தில் சரியாக எடுக்கும் முடிவு சரியான வெற்றியைத் தரும்.

எனது அப்பாவும், அம்மாவும் நான் திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான வயது எனத் தெரிவித்தனர். அவர்களது முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் எனது சம்மதத்தையும் தெரிவித்தேன்,” எனக் கூறியுள்ளார். ஒரு வழியாக திருமண வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சுவாதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதர்சனம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Next post நன்கொடை பணத்தில் மேக்கப்பா..? பெண் அமைச்சர் பணிநீக்கம்.!!