விமானத்தின் எடை கூடிவிட்டது… யாரவது இறங்கினால் 250 பவுன்ஸ் தருவோம்: விமானி விடுத்த அதிரடி அறிவித்தல்!!
பிரித்தானியாவில் மலிவு விலையில் இயங்கிவரும் விமானசேவை நிறுவனங்களில் பெயர்போன நிறுவனமே ஈசி-ஜெட் ஆகும். இவர்களின் சேவையில் பல குறைபாடுகள் இருப்பது அவ்வப்போது பெரும் சர்சையை கிளப்புவது வழமையாகிவிட்டது.
தமது விமானத்தின் உள்ளே இருக்கும் கழிவறையைப் பாவிக்க காசு கட்டவேண்டும் என்று ஒரு முறையைக் கொண்டுவர இருந்தது ஈசி-ஜெட் ஆகும். மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பால் அதனை அவர்கள் பின்னர் கைவிட்டார்கள்.
பிரித்தானியாவின் சவுத்-என்ட் விமான நிலையத்தில் இருந்து மலாகா செல்ல ஈசி-ஜெட் விமானம் தயாராக இருந்தது. ஏர்-பஸ் 319 ரக விமானத்தில் சுமார் 156 பயணிகள் ஏறி இருந்தார்கள். விமானம் புறப்பட சிறிது நேரம் இருக்கையில், விமானியிடம் இருந்து ஒரு அறிவித்தல் வந்துள்ளது.
இந்த விமானத்தில் உள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு நாம் பறப்பில் ஈடுபட முடியாது. ஏன் என்றால் விமானம் எடையால் அதிகரித்துள்ளது. (ஓவர் வெயிட்) எனவே யாராவது பயணிகள் இறங்க விரும்பினால் இறங்கலாம். அவர்களுக்கு நாங்கள் 250 பவுன்களை கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
ஏதோ பஸ்சில் பயணிகளை அதிகம் ஏற்றி, பின்னர் ஓவர் வெயிட் என்று சொல்லி இறக்குவது போல அல்லவா இது இருக்கிறது ? அட அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவென்றால், நாங்கள் செல்லவேண்டிய பாதையில் காற்று பலமாக வீசவுள்ளது.
அதனால் பயணிகளை குறைவாக ஏற்றிச் சென்றால் தப்பலாம் என்பது தான். இதனைக் கேட்டபின்னர் உயிருக்கு பயந்தவர்கள் இருப்பார்களா ? பலர் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டார்களாம். பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றுள்ளது. என்னவெல்லாம் நடக்கிறது பார்த்தீர்களா ?
Average Rating