நேபாள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது சிறுவன் உலக சாதனை!!

Read Time:1 Minute, 19 Second

record_001நேபாள நாட்டில் உள்ள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது இந்திய சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன் தான் இந்த சாதனையை புரிந்துள்ளான்.

இந்த மலைச்சிகரம் 5,554 மீட்டர் உயரமானது. இதில் ஏறுவதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான். கடந்த 7ம் திகதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினான்.

அங்கிருந்து 10 நாட்களில் அவன் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான்.

இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் இந்த ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை அச்சுறுத்தும் கோமாளிகள்…? பீதியில் பிரான்ஸ்!!
Next post விமானத்தின் எடை கூடிவிட்டது… யாரவது இறங்கினால் 250 பவுன்ஸ் தருவோம்: விமானி விடுத்த அதிரடி அறிவித்தல்!!