இறந்த பாட்டியிடமிருந்து 3 வருடங்களின் பின் கிடைத்த SMS : மனநிலை பாதிக்கப்பட்ட பிரித்தானிய பெண்.!!

Read Time:3 Minute, 39 Second

1413451850831_wps_14_Sheri_Emerson_and_her_uncமூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த பாட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்து கிடைத்த குறுஞ்செய்தியினால் அதிர்ச்சியடைந்த யுவதி மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் South Shields பிரதேசத்தைச் சேர்ந்த Lesley Emerson என்பவர் தனது 59ஆவது வயதில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் காலமாகியிருந்தார். ஷெரி Emerson என்ற யுவதி தனது பாட்டியான Lesley Emerson மீது அதிக அன்பு வைத்திருந்தார். பாட்டியின் மரணத்தை அடுத்து இவர் மனமுடைந்து போய்விட்டார்.

Lesley Emerson காலமானதை அடுத்து அவர் பயன்படுத்திவந்த கையடக்கத் தொலைபேசியையும், சில பொருட்களும் அவருடன் சேர்த்து புதைக்கப்பட்டது. மன உளைச்சலுக்கு உள்ளான ஷெரி Emerson பாட்டியுடன் அவரது கையடக்கத் தொலைபேசியும் சேர்த்து புதைக்கப்பட்டுள்ளதால் நினைவு வந்த நேரமெல்லாம் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். புதைக்கப்பட்ட பாட்டி அந்த குறுஞ்செய்திகளுக்கு பதில் அனுப்ப மாட்டார் என்பதை ஷெரி Emerson நன்கு அறிந்தவராவார்.

எனினும், அந்த குறுஞ் செய்திகளுக்கு பதிலொன்று பாட்டியின் கையடக்கத் தொலைபேசி இலக்கத்திடம் இருந்து 3 வருடங்களுக்குப் பின்னர் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த செய்தியில் நான் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாசித்த ஷெரி Emerson தற்போது அதிர்ச்சியடைந்து மனநிலை பாதிக்கப்பட்டார்.

இதேவேளை காலமான ஒருவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்திடம் இருந்து எவ்வாறு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என சம்பந்தப்பட்ட தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திடம் விசாரித்தபோது, குறித்த இலக்கம் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதனை புதிப்பித்து பிரிதொரு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பதில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஷெரி Emerson இன் குறுஞ்செய்திக்கு தற்போது அந்த இலக்கத்தைப் பயன்படுத்திவரும் நபரே பதில் அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து இதற்காக ஷெரி Emerson இன் குடும்பத்திடம் குறித்த தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. எவ்வாறாயினும், இந்த சம்பவம் கேள்வியுற்றவர்கள் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரினுள் வைத்து 14 வயதுச் சிறுமியை கற்பழித்த IRA தலைவர்!!
Next post காது கேளாத சிறுமியை 10 ஆண்டுகளாக அடிமையாக வைத்து பலாத்காரம் செய்த 85 வயது தாத்தா.!!