பிச்சைக்காரரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு டீ.என்.ஏ பரிசோதனை!!
தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் நேற்று பகல் மீட்கப்பட்ட சிறுவனுடைய பெற்றோர் யாரெனக் கண்டறிய டீ.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அந்த சிறுவன் தன் மகன் என சந்தேகநபரான பிச்சைக்காரர் கூறியமையே இதற்குக் காரணமாகும்.
அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் காணாமல் போன ஒரு சிறுவன் நேற்றையதினம் தம்புள்ளை பஸ் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் சிறுவனைக் கடத்திய குற்றச்சாட்டில் பிச்சைக்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சிறுவனையும் சந்தேகநபரையும் எதிர்வரும் 12ம் திகதி பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு தம்புள்ளை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சிறுவன் அனுராதபுரம் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
Average Rating