பெருந் தொகை பணத்தைக் கடத்த முற்பட்ட வியாபாரி கைது!!
Read Time:1 Minute, 5 Second
சட்டவிரோதமாக ஒரு தொகை பணத்தைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சார்ஜாவுக்குச் செல்ல முற்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக சுங்கப் ஊடகப் பேச்சாளர் லேஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
அறுபது இலட்சத்து 66,094 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நாணயங்கள் இவர் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில் அமெரிக்க டொலர் மற்றும் யூரோ ஆகியன அடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சந்தேகநபருக்கு இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating