புறக்கோட்டை, மாத்தறையில் தீ விபத்து!!

Read Time:1 Minute, 38 Second

1883127237Untitled-1புறக்கோட்டை – முதல் குறுக்குத் தெருவில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மின் உபகரண விற்பனை நிலையம் ஒன்றும், கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றும், ஆடை விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மாத்தறை அனகாரிக தர்மபால மாவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயைக் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்த சேதவிபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெருந் தொகை பணத்தைக் கடத்த முற்பட்ட வியாபாரி கைது!!
Next post கிளிநொச்சியில் விபத்து: இரண்டரை வயது சிறுவன் பலி!!