அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கவலை!!
Read Time:47 Second
பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கனடா பாராளுமன்றப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த அச்சுறுத்தலுக்கெதிராகப் போரிடுவதற்கு அனைவரும் சரிசமமான பங்குதாரர்களாக ஒன்றுகூட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating