அதிஷ்டலாபச் சீட்டில் 2 1/2 கோடியை வென்றவர் சடலமாக மீட்பு!!
Read Time:1 Minute, 22 Second
கல்கமுவ – வெடகுலுவாகம பிரதேசத்தில், இரண்டரைக் கோடி ரூபாவை அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் வெற்றி கொண்ட 38 வயதான ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது கொலையா தற்கொலை என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் பணம் கிடைத்த பின்னர் தினமும் மதுபானம் அருந்துவதாகவும் ஒரு பிள்ளைகளின் தந்தையான இவரை மனைவி விட்டுச் சென்று விட்டதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இவர் நேற்றையதினம் நண்பர்கள் சிலருடன் மதுபானம் அருந்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுஎவ்வாறு இருப்பினும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating