துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் – கல்லால் அடித்து கொலை!!
சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியை சேர்ந்தவர் ஹசன்அகமது (வயது 18). இவர் அந்த பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த பகுதியில் அல்சஹாம் என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இதுபற்றி தகவல் கிடைத்தது. அவர்கள் ஹசன்அகமதுவை பிடித்து சென்றனர். அவரிடம் அவர்கள் விசாரித்ததில் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக்கொண்டார்.
இதையடுத்து ஹசன்அகமதுவை கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி கல்லால் அடித்து கொன்றனர்.
இதே பகுதியில் ஒரு பெண் 4 ஆண்களை திருமணம் செய்திருந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததையடுத்து அந்த பெண்ணையும் கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். அவர் கடந்த மாதம் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Average Rating