கணவருடன் தகராறு: இளம்பெண் தற்கொலை!!
Read Time:45 Second
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி ஜானகி (29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. அட்சயா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜானகி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் நடந்து 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
Average Rating