விலை உயர்ந்த செல்போன்களை திருடி நக்சலைட்டுகளுக்கு சப்ளை செய்யும் சிறுவர்கள்!!
செல்போன் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. பலர் ஸ்மார்ட் போன் என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். இந்த வகை போன்கள் ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கிறது.
நகைபறிப்பு கஷ்டமாக இருப்பதால் விலை உயர்ந்த செல்போன்களை திருடுவதில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 35 பேரிடம் விலை உயர்ந்த செல்போன்களை திருடி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் ராஜ்குமார் (19), சிவகுமார்(19). ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜார்கண்ட் மாநிலம் ஹிபஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இதற்காகவே ஒரு கும்பல் வடமாநிலங்களில் இருந்து சென்னை வந்துள்ளார்கள். இந்த கும்பலுக்கு தலைவனாக பங்காளி என்ற சுமித்தாஸ் (26) செயல்பட்டுள்ளான். இவன் தன்னுடன் ராஜ்குமார் (19), சிவகுமார் (19), சாந்தகுமார் (12), ராஜ்குமார் (10), விதேசிகுமார் (10) ஆகிய 5 பேரை அழைத்து வந்துள்ளான். அவர்களை பெரியமேடு, திருவல்லிக்கேணி, அமிஞ்சிக்கரை, ஆகிய இடங்களில் லாட்ஜ்களில் தங்க வைத்துள்ளான். அங்கிருந்து தனித்தனி குழுவாக சென்று நெரிசல் மிகுந்த இடங்களில் தங்கள் கைவரிகையை காட்டுவார்களாம்.
கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதை நோட்டம் போட்டு அங்கு சென்று தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இவர்கள் திருடிய அனைத்து செல்போன்களும் ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்டவைதான். கையில் செல்போன்களை வைத்து கொண்டு ஹாயாக நடந்து செல்லும் நபர்களை பின் தொடர்ந்து செல்வார்கள். அவர்களை இடித்தபடி சென்று நைசாக செல்போனை அபேஸ் செய்து விடுவார்கள்.
திருடி கொண்டு செல்லும் செல்போன்களை எல்லை மாநிலத்தில் செயல்பட்டு வரும் நக்சலைட்டுகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த கும்பலில் இருப்பவர்கள் பெரும்பாலும் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். கும்பல் தலைவன் பங்காளியை தவிர 5 பேரும் பிடிபட்டு விட்டனர். அவரை தேடி வருகிறார்கள். இந்த முறை அந்த கும்பலை கூண்டோடு கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Average Rating