யாழில் கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்க்கும் பிரபல பாடசாலை மாணவிகள்!!
யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே இ்வ்வாறு கைத்தொலைபேசிகளைப் பாடசாலைக்குள் கொண்டு வந்து துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவா்களின் இந்த நடவடிக்கையை அறி்ந்த பாடசாலை நிா்வாகம் அவா்களில் சிலா் கொண்டு வந்த கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து அறிவுறை கூறியதாகவும் தெரியவருகின்றது.
இதே நேரம் குறித்த பாடசாலை மாணவிகள் இருவரை பாடசாலை நிா்வாகம் நிறுத்த முற்பட்ட வேளை மாணவி ஒருவரின் தந்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவிகளை தொடா்ந்து அப்பாடசாலையில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்ததாகவும் இதற்காக பெருமளவு பணம் பாடசாலை நிா்வாகத்திடம் கையளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபாசப் படம் பாா்த்த மாணவிகளின் வகுப்பு ஆசிரியை இது தொடா்பாக எதிா்ப்புத் தெரிவித்து மாணவிகளை மீண்டும் தனது வகுப்புக்கு அனுமதிக்க மறுத்த போது பாடசாலை நிா்வாகத்தால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த வகுப்பைச் சோ்ந்த மாணவிகளில் 6 போ் கைத்தொலைபேசிகள் கொண்டு ஆபாசபடங்கள் பாா்த்ததாகவும், மற்றவா்களுக்கும் அதை பகிா்ந்ததாகவும், இது தொடா்பாக வகுப்பு ஆசிரியை விசாரணை செய்து அதே வயதானவா்களின் இருவகுப்பைச் சோ்ந்த 7 மாணவிகளை விசாரணை செய்ய முற்பட்ட போது அந்தந்த வகுப்பு ஆசிரியா்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாகவும்,
இது தொடா்பாக பாடசாலை அதிபரிடம் குறித்த ஆசிரியை தெரிவித்த போது பாடசாலை அதிபா் ஆசிரியையை ஏசிவிட்டு அதன் பின்னா் வேண்டா வெறுப்பாகவே குறித்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதாகவும் பாடசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
Average Rating