பல பெண்கள் என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார்கள்: 39 பெண்களை கொன்ற நபர் பரபரப்பு வாக்குமூலம்!!

Read Time:1 Minute, 56 Second

f0db0bf4d24edac6cc5e1aa93ea8b073கடந்த பல மாதங்களாக பிரேசில் நாட்டில் பல பெண்கள் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு வந்தார்கள். 16 வயது தொடக்கம் 39 வயதுடைய பல பெண்கள் இவ்வாறு கொலைசெய்யப்பட என்ன காரணம் என்று தெரியாமல் அன் நாட்டு பொலிஸ் இலாகா தலை சுற்றி குழப்பத்தில் இருந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னரே அவர்கள் அதிரடியாக இக்கொலையாளியைக் கைதுசெய்தார்கள். றோச்சா எனப்படும் 26 நபரே இக்கொலைகளைப் புரிந்துவந்த நபர் ஆவார்.

அவர் தற்போது சிறைச்சாலையில் இருக்கிறார். அவர் தனது கைகளை காயப்படுத்தி சிறைக் கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி தான் கொலை செய்தமைக்கு காரணங்கள் உண்டு என்று உரக்க கத்தியுள்ளார் ! தான் சிறுவயதாக இருந்தபோது தன்னை பல பெண்கள் கற்பழித்துள்ளார்கள், என்று திடுக்கிடும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் காரணமாகவே தனக்கு பெண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

றோச்சா எனப்படும் பிரேசில் நாட்டு நபர் cதான் பிடிபடாமல் இருக்க காரின் இலக்கத்தகடுகளை மாற்றி பல சித்துவிளையாட்டுகளையும் செய்துள்ளார். இவரிடம் கைத்துப்பாக்கி, கூரிய ஆயுதம், கத்தி போன்ற பல ஆயுதங்கள் இருந்துள்ளது. இவை அனைத்துமே பெண்களை கொலைசெய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் – நடிகர் சங்கம்!!
Next post தந்தையின் கள்ளத்தொடர்பு – மகளை கொன்ற தந்தை!!