குப்பை மேட்டுக்கு அருகில் கிடந்த சடலம் யாருடையது?
Read Time:45 Second
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் களனிய – மனேல்கம பகுதி குப்பை மேட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பேலியகொட பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி இன்று காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்தவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
மேலும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating