முதியவர் கொடுப்பனவு அதிகரிப்பு, வௌிநாட்டில் பணி புரிபவர்களுக்கு ஓய்வூதியம்!!
Read Time:59 Second
இலங்கையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2015 ஜனவரி முதல் 1000ரூபாவில் இருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் ஒன்றை வழங்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதை இன்று சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலை செல்ல மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Average Rating