சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக கூறி மூன்று பெண்கள் சித்ரவதை!!
அசாமில் சிறுவனுக்கு சூன்யம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களை கிராம மக்கள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ககோபதார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்சங் தேயிலை தோட்டத்தில், அடித்து துன்புறுத்தப்பட்ட ரதானி கதா, மாலா புமிஜ், கங்கி உராக் ஆகிய மூன்று பெண்களும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் லம்ஹவ் தொங்கால் தெரிவித்துள்ளார்.
மேலும் 45 முதல் 50 வயது மதிக்கதக்க இப்பெண்கள் மூவரையும் நேற்று இரவு கிராம மக்கள் சுமார் 300 பேர் மந்திரவாதி ஒருவரின் தலைமையில், துன்புறுத்தியுள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவனான சுராஜ் கொவாலாவின் உடல் நலக்குறைவிற்கு இப்பெண்கள் தான் காரணமென பழி சுமத்தியுள்ளனர். தற்போது அச்சிறுவன் அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.
இச்சம்பவதிற்கு பிறகு கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். ஆனால், போலீசார் 45 நிமிடங்களில் நிலைமையை சீர் செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating