சிறுவனைக் கடத்தியதாகக் கூறப்படும் பிக்கு விளக்கமறியலில்!!
Read Time:1 Minute, 18 Second
ஹொரண – படுவிட பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் தாய், பாட்டி மற்றும் சந்தேகநபரான பிக்குவுடனும் சைக்கிள் வாங்க ஹொரண நகருக்குச் சென்றுள்ளார்.
இதன்போது தாய் மற்றும் பாட்டி வங்கிக்குச் சென்றவேளை சிறுவனுடன் பிக்குவும் காணாமல் போயுள்ளார்.
இது குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி நேற்று காலை சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிக்குவை அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி யுரேஷா டி சில்வா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Average Rating