குடித்து கும்மாளமிட்ட நடிகைகள் – வளைத்துப் பிடித்த பொலிஸார்!!
மது விருந்தில் போதையில் ஆட்டம் போட்ட தெலுங்கு நடிகைகளை பொலிசார் பிடித்து சென்றனர்.
சமீப காலமாக மது விருந்து கலாசாரம், இளைஞர்கள் மத்தியில் பரவி வருகிறது. பண்ணை வீடுகளில் வாரத்துக்கு ஒரு முறை கூடி குடித்து கும்மாளம் போடுகின்றனர்.
இதற்கு சிவசேனா போன்ற சில இயக்கங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மது விருந்து நடக்கும் இடங்களில் புகுந்து தாக்குதலும் நடத்துகிறார்கள். இளம் பெண்களுக்கு அடி உதையெல்லாம் விழுந்துள்ளது. இது போன்ற மது விருந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் வந்தது. இதில் நடிகைகளும் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது.
இதையடுத்து பொலிசார் உஷார் ஆனார்கள். பத்திரிகைகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பபட்டது. மது விருந்து நடப்பதாக சொல்லப்பட்ட ரிசார்ட்டை எல்லோரும் சுற்றி வளைத்தனர்.
பொலிசார் அதிரடியாக உள்ளே புகுந்தனர். அங்கு நடிகைகளும், இளம் பெண்களும் மது குடித்தபடி போதையில் நடனம் ஆடிக் கொண்டு இருந்தார்கள். எல்லோரும் அரை குறையாக ஆபாசமாக உடை அணிந்து இருந்தனர். அவர்களுடன் இளைஞர்களும் ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
எல்லோரையும் பொலிசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 10 ஆண்களும் 10 பெண்களும் பிடிபட்டார்கள். தொலைக்காட்சி நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் இதில் இருந்தனர். எல்லோரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள்.
Average Rating