காலைவாறிய கவர்ச்சி – மனம்மாறிய சமந்தா!!
இரசிகர்களைக் கவர பிகினி தேவையில்லை நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தாலே போதும் என்று நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம்.
சுடிதார், சல்வார், புடவை என ஹோம்லி லுக்கில் நடித்து வந்தவர் சமந்தா. இதுதான் அவருக்கு எண்ணற்ற இரசிகர்களைப் பெற்றுத்தந்தது. எனவே இனி டீசன்ட் உடைகளை அணிந்து மட்டுமே திரைப்படங்களில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார் சமந்தா.
தான் நடித்த அனைத்து படங்களிலுமே சமர்த்து பொண்ணாக நடித்த சமந்தா, அஞ்சான் படத்தில் கவர்ச்சியின் எல்லையைத் தாண்டினார்.
பிகினி வரை சென்றும் அஞ்சான் படம் 5 நாள் கூட சரியாக ஓடவில்லை. மாறாக இரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனமே கிடைத்தது சமந்தாவுக்கு.
தீபாவளிக்கு வெளியான கத்தி திரைப்படத்தில் தனது பழைய பாணி உடைகளையே அணிந்து நடித்தார் சமந்தா. படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. சமந்தாவிற்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள சமந்தா. இனி பிகினி, கவர்ச்சி உடைகளை கண்ணால் கூட பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
கதைக்கு முக்கியத்துவம் சதைக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறாராம்.
Average Rating