விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணையில் வைகோ பங்கேற்பு!!
Read Time:55 Second
விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான விசாரணையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொள்ளவுள்ளார்.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தின் விசாரணை 2014 செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டம், குன்னூரில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த விசாரணையில் வைகோ கலந்து கொள்வுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
Average Rating