கூட்டமைப்புக்கான ஜனாதிபதியின் அழைப்பு பழைய பல்லவிக்கு ஒப்பானது: பொன்செல்வராசா!!
Read Time:1 Minute, 20 Second
அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதான பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அதற்கான அழைப்பு ஆகியவற்றை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக்கத் தெளிவாகவே அறிவித்து விட்ட நிலையில் வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது பாடிய பாட்டையே மீண்டும் பாடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பானது என்று அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இன்று சபையில் விமர்சித்தார்.
தமிழர் தொடர்பில் ஏதாவதொன்றை கூறிவிட வேண்டும் என்பதற்காக இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொன். செல்வராசா, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் எதுவும் கூறப்படாதது கவலையளிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
Average Rating