(VIDEO) ரஷ்யாவில் வீதிநடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 56 Second

1414072095058_wps_18_Pic_shows_Cement_mixer_waரஷ்யாவில் உள்ள பரபரப்பான வீதியொன்றில் திடீரென ஏற்பட்ட பள்ளம் ஒன்றில்வாகனம் ஒன்று சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் அதன் சாரதி படுகாயத்துடன் உயிர் பிழைத்தார்.

மேற்கு ரஷ்யாவின் வொரந்தஸ் என்ற நகரில் உள்ள பரபரப்பான வீதி ஒன்றில் 47 வயதுடைய எடம் சோப்ராவ் என்பவர் சீமெந்து கலவை செய்யும் இயந்திரம் அடங்கிய வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.

வீதியில் மிதமான வேகத்தில் அவர் சென்று கொண்டிருக்கும்போது திடீரென வீதியின் நடுவே ஒரு பள்ளம் ஏற்பட்டது. அவர் அந்த பள்ளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, வண்டியை நிறுத்த முற்பட்ட போது வண்டியின் பின்பகுதி பள்ளத்தில் சிக்கியது.

இதனால் வண்டியின் பாதியளவு பள்ளத்தில் சிக்கிக்கொண்டதால் உள்ளே அதன் சாரதி எடம் சோப்ராவ் சிக்கிக்கொண்டார். அந்த பகுதியில் வீதியில் சென்றவர்கள் வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விரைந்து வந்த மீட்புக்குழுவினர் முதலில் படுகாயமடைந்த சாரதியை காப்பாற்றினர். பின்னர் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பள்ளத்தில் விழுந்த சீமெண்ட் கலவை வாகனம் மீட்கப்பட்டது.

வீதியின்;நடுவில் திடீரென ஏற்பட்ட பள்ளம் குறித்து ரஷ்யாவின் புவியியல் அறிஞர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னிக்கவும், நான் சாக விரும்புகிறேன்” பொறியியல் மாணவர் தற்கொலை: கேலிக்கையாக ‘லைக்’ போட்ட 28 பேர்!!
Next post 2 சிறுமிகளை கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!