2 சிறுமிகளை கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு ஜெயில்: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!

Read Time:2 Minute, 27 Second

341ed484-cecf-485a-a94d-c32239363199_S_secvpfடெல்லியைச் சேர்ந்த தொழிலாளி ராம்சிங். இவனுக்கு 4 மகள்கள் உள்ளனர். 2 முறை திருமணம் செய்தும் இரு மனைவிகளும் அவனை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இதனால் 4 மகள்களுடன் வசித்து வந்தான்.

இவனது மூத்த மகள் கடந்த 2007–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி போலீசில் பரபரப்பு புகார் செய்தார். அதில் 15 வயது நிரம்பிய தன்னையும், 11 வயதாகும் தங்கையையும் தனது தந்தையே கற்பழித்து விட்டதாக கூறியிருந்தார்.

போலீசார் ராம்சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனை செய்ததில் கற்பழிப்பு உறுதியானது. இதையடுத்து ராம்சிங் மீது டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து ராம்சிங் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பிரதீபா ராணி மனுவை விசாரித்து 10 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு கூறினார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

பெற்ற மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டு இருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அவருக்கு கருணையே காட்ட முடியாது. தன் மீது மகள்கள் வேண்டும் என்றே புகார் கூறியிருப்பதாக குறிப்பிட்டு இருப்பதை ஏற்க முடியாது. புகாரில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது.

தனது மகள்களுக்கு எதிராக தந்தையே குற்றச் செயல் புரிந்து இருப்பது பேரழிவுக்கு சமமானது.

இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) ரஷ்யாவில் வீதிநடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு!!
Next post கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழரான சுந்தர் பிச்சை நியமனம்!!