கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழரான சுந்தர் பிச்சை நியமனம்!!
Read Time:1 Minute, 16 Second
‘கூகுள்’ இணைய தளம் உலகமெங்கும் பிரசித்தி பெற்று திகழ்கிறது. இந்த நிறுவனத்தில் தமிழரான சுந்தர் பிச்சை (வயது 42), கடந்த 2004-ம் ஆண்டு சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
இப்போது அவரை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், மிக முக்கிய பொறுப்பில் அமர்த்தி உள்ளார். அதாவது, தேடல், வரைபடங்கள், கூகுள் பிளஸ். வர்த்தகம், விளம்பரம், உள்கட்டமைப்பு ஆகிய 6 பிரிவுகளின் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பை சுந்தர் பிச்சை கவனிப்பார்.
இதுவரை இந்த பிரிவுகளை தனித்தனியே கவனித்து வந்தவர்கள், லாரி பேஜின் கீழ் செயல்பட்டு வந்தனர். இனி அவர்கள் சுந்தர்பிச்சையின் கீழ் செயல்படுவார்கள்.
எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கிற தகுதி படைத்தவர் என்று சுந்தர் பிச்சையை இணைய தள வல்லுனர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.
Average Rating