பெண்ணிடம் நகை பறிப்பு: கொள்ளையன் கைது!!
Read Time:48 Second
கே.கே. நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் இரவு 8.30 மணிக்கு தனது பேரன், பேத்தியுடன் கடைக்கு நடந்து சென்றார். அப்போது ஒருவன் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான்.
அப்போது ரோந்து சென்ற போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவனது பெயர் மணிகண்டன் என்பதும் கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது. அவனிடம் இருந்து 6 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating