காணாமல் போனோரின் உறவுகள் தொடர்பில் கரிசனை காட்டுங்கள் : பாப்பரசருக்கு கடிதம்!!
காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில்,
வவுனியா, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை காணாமல் போன உறவுகளுடன் ஓர் சந்திப்பு இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது இலங்கை வரவுள்ள பாப்பரசருக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் 60 பேரினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், இலங்கை வருகை தரும் பாப்பரசர் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்திக்க வேண்டும் எனவும் யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள பிரதேசங்களையும் மக்களையும் பார்வையிட்டு எமக்கான தீர்வுக்கு உதவ வேண்டும் எனவும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Average Rating