பஜிரோ – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி, மூவர் காயம்!!

Read Time:2 Minute, 7 Second

D20202பஜிரோ வாகன மொன்றால் மோதப்பட்டு 30 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று கட்டுகஸ்தோட்டைப் பொலீஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கண்டி- வத்துகாமம் பிரதான வீதியில் பொல்கொல்லை என்னுமிடத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர். பொல்கொல்லை மகாவலி நீர்தேக்கத்திற்கு அண்மித்த இடத்தில் இடம் பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் வீழந்துள்ளது.

பொல்கொல்லைப் பரதேசத்திலுள்ள விவசாயப் பண்ணை ஒன்றில் கடமை புரியும் ஆர்.எம்.கருனாரத்த (56) என்பவரே விபத்தில் மரணமடைந்தள்ளார். பஜிரோ ரக வாகனத்தில் வந்தோhர் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை வைத்திய
சாலைக்கு பிரதேச வாசிகளால எடுத்துச் செல்லப்பட்ட போதும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிகிட்சை பயனின்றி மரணித்துள்ளார். பெஜரோ வாகனமும் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பஜிரோ வாகனத்தை செலுத்தியவர் தெலதெனியாப் பிரதேசத்ததைச் சேர்ந்த ஒரு மாணவன் என்றும் அதிக மது போதையில் இருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மாணவனை கண்டி மஜிஸ்திரேட் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுககப்பட்டுள்ளதாக
கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போனோரின் உறவுகள் தொடர்பில் கரிசனை காட்டுங்கள் : பாப்பரசருக்கு கடிதம்!!
Next post காத்தான்குடியில் இறந்து கரையொதுங்கும் நண்டு, மீன்கள்!!