காத்தான்குடியில் இறந்து கரையொதுங்கும் நண்டு, மீன்கள்!!
Read Time:1 Minute, 17 Second
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் கடலில் இருந்து சில உயிரினங்கள் இறந்த நிலையில் கரையெதுங்கி வருகின்றன.
நேற்று சனிக்கிழமை மாலையிலிருந்து இந்த உயிரினங்கள் கரையொதுங்கவதாக காத்தான்குடி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறிய மீன் இனங்கள் மற்றும் நண்டுகள் போன்ற கடல் உயரினங்களே இவ்வாறு கரையொதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜிடம் கேட்ட போது கடலின் உற்புறச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்து கரையொதுங்குவதற்கு காரணமாகும்.
அத்தோடு கடந்த ஒரு சில வருடங்களாக இந்தக்காலப்பகுதியில் இவ்வாறு கடல் உயிரினங்கள் கரை யொதுங்குகின்றன.இது கடல் நிலை மாற்றமாகுமென தெரிவித்தார்.
Average Rating