புலி துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஒரு வருட கடூழிய சிறை!!
Read Time:1 Minute, 2 Second
ரி-56 ரக துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றவாளிக்கு ஒருவருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை அளித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் 50,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஒருவர் குறித்த துப்பாக்கியை வழங்கியுள்ளதாகவும் குற்றச் செயலில் ஈடுபடவென கெப்பதிகொல்லாவ பகுதிக்கு துப்பாக்கி கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating